புதன், 1 ஏப்ரல், 2015

”ஜோக்ஸ்”
சி.பி.ஐ. விசாரணைக்கு தலைவர் சிரிச்சிட்டே போறாரு?
எல்லா கேள்வியும் அவுட்டாயிருச்சாம்!

பயப்படாதீங்க, முதல் ஊசி போடும் போது மட்டும் தான் வலிக்கும்! ரெண்டாவது ஊசி போடும் போது வலிக்காது!
அப்ப அந்த ரெண்டாவது ஊசியையே போடுங்க டாக்டர்

”உடம்பு இளைக்கணும். நாலைலேருந்து பெண்கள் ’ஜிம்’முக்கு போகப்போறேன்”
“வேண்டாம், சொன்னா கேளு! ரெம்ப காஸ்ட்லியான மிஷினெல்லாம் வெச்சிருப்பாங்க, உடெஞ்சு போயிரும்!”

”ஆப்பரேஷன் முடிஞ்சிருச்சு. பேஷண்ட் செத்துட்டாருன்னு சொன்னீங்க, உயிரோட வந்து நிக்கிறாரே டாக்டர்?”
“ஆஹா! அப்பரேஷன் சக்ஸஸ்!”

”ஏட்டையாக்கு கோவம் வர்ர மாதிரி கபாலி பேசிட்டானாம், பின்னி எடுத்துட்டாரு!”
“அப்படி என்ன சொல்லிட்டானாம், கபாலி?”
“தொழிலை விட்டுட்டானாம், திருந்தி வாழப்போறானாம்!”

”பிள்ளையாரே, என்ன கவலை!”
“மவுஸ் இருக்கு, கம்ப்யூட்டர் இல்லயே!”

“மருந்து சீட்டுல பிள்ளையார் சுழி போடாதீங்க டாக்டர்?
“ஏன், அது என் பழக்கமாச்சே!”
“மருந்து கடைக்காரன் அதுக்கும் ஒரு மருந்தை குடுத்து காசை வாங்கிர்ரானே டாக்டர்!”

“மந்திரியாரே, கஜானா நிரம்ப ஒரு வழி சொல்லுங்கள்”
”அளவை சின்னதாக்கி ஒரு வெற்றிலை பெட்டி அளவுக்கு வைத்துவிட்டால் போதும் மன்னா, நிரம்பிவிடும்”

”மன்னா, எதிரி நாட்டு மன்னன் படை எடுத்து வந்து விட்டான் என்று கேள்விப்பட்டதும், நம் முப்படை தளபதிகளும் ஓடி விட்டார்கள் !”
“ம்ஹும்……! கோழைகள்! இப்படி ஒரு மன்னனை தனியே விட்டு விட்டு ஓடலாமா?”

“மன்னா, போருக்கு போக படைகள் தயார்…..!!”
“போக வேண்டியதுதானே…! இதையெல்லாம் எங்கிட்ட சொல்லணுமா? கையில் மருதாணி வைத்திருக்கிறேனே, கவனிக்கவில்லையா?”

”அதென்ன, மந்திரியாரே, கடவுள் இருக்கிறார் என்று ஆணித்தரமாய் சொல்கிறீர்கள்?”

“மன்னா, உங்களை புகழ்ந்து பாமாலை பாடிய புலவன், காமாலை வந்து சாக கிடக்கிறான் மன்னா!”

மன்னர் ஏன் புலவரை போட்டு இந்த அடி அடிக்கிறார்?
மன்னரை பற்றி “பேடி” ராகத்தில் பாடினாராம்!